Face Book LIKE

Monday, April 6, 2015

முதுமையை வெல்க !



நேற்றைய நினைவுகளின்
நேசக்  காற்றடிக்க
நெருடல்க ளொருபுறம்
நெஞ்சைக் கீறின !

யாரோ உருட்டிவிட்ட
தகரத்தின் சப்தங்கள்
செவியோரம் சேர்ந்துவந்து
சோக கீதம் இசைத்தன !

என்ன இதன் பொருள் என
எண்ணத் தலைப் பட்டேன் !
என்னையே நான்
கேட்டுக்கொண்டேன் !

முன்னிற்கும் முதுமைக்கு
முன்வரவு  சொல்லவொரு
சூசகமோ என்றெனக்குத்
தோன்றியது பொய்யல்ல !

முதுமைக் கோருருவம்
முன்னின் றெனைநோக்கி
முகமன் உரைப்பதுபோல்
உரைக்கும் சிலசொற்கள் :

'சொல்மொழி செலும்தூரம்
நின்விழி செல்லாது
விழிசெல்லும் இடமெல்லாம்
மெய்செல்ல வொண்ணாது

மனம்செல்லும் இடமெங்கும்
துணைநிற்க வியலாது
மதியெங்கும் இயலாமை
தன்பிடியைத் தளர்த்தாது !

பங்கேற்கும் துணையொன்றும்
இல்லாத காலத்தில் - வாழ்க்கைப்
படகோ இடம்விட்டு
நகராத கோலத்தில் !

அசையாத வெள்ளத்தின்
இடையே  அகப்பட்டு,
அழியாக் காலத்தின்
வழிசேரும் கோலத்தில் !

எவராலும் தவிர்க்க
முடியாத முதுமையிது!
எதிர்கொள்ளும் துணிவோடு
மனதார வரவேற்பாய் !

மனத்தால் இளமைபெற்று
மதியில் ஞானம் பெற்று
ஈவாய்முதுமைக்கும் இளமை - இசைபட
வாழ்வாய் ! என்றைக்கும் இனிமை !'

K.Balaji
March 12 2015 
12 a.m.

No comments: