Face Book LIKE

Monday, November 21, 2016

வீதியோரம் வீழ்ந்த மலர் !

வீதியோரம் வீழ்ந்த மலர் !

ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !

ஒரு
'பாதையோர மலராக',
பார்ப்பவர்  கண்ணுக்கு
முள்ளாக,
எந்த நேரமும்
பறந்து செல்லக்
காத்திருக்கும்
பதராக.......
ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !

ராகமில்லாத
இந்த வரிகள்
எந்த ரகம்?
என்ன பயன்?

மீட்டும் விரலின்றி
வாடுமொரு
வீணையின்
தந்தியாய்,
வியக்கும் கண்களின்றி
ஏங்கும் ஒரு
விசித்திரச் சிற்பமாய்,
விழலில்பாய்கின்ற
வெள்ளத் துளிகளாய்,
வேனலின் வெக்கையாய்,
கானற்பாலையில்
கனலும் முட்களாய்,
கண்களின் ஓரத்தில் காய்ந்த
கண்ணீர்த் துளிகளாய்,
என்றும் எவருக்கும்
ஏற்காத பாரமாய்,
கனியாத எட்டியாய்,
விரியாத மொட்டாய்,
விடியாத இரவாய்,
வேண்டாத வாழ்வாய்,
பணியாத வீம்பாய்,
பாழ்மனத் தீயினில்
வெந்திடும் நாளமாய் ....

விடியலைக் கனவினில்
கண்டதோர் குளுமையில்,
வேதனை மரத்த
மனத்துடன்
இன்னும்....

ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !!
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !


--கே. பாலாஜி
  21.11.2016
இரவு 8 மணி



Monday, June 27, 2016

'அம்மா' என்றொரு அற்புதம் !

'அம்மா' என்றொரு அற்புதம் ! ********************************
'அம்மா' என்றொரு
அற்புதக் களஞ்சியம் !
இன்று
நான் அலறி அழைத்தாலும்
வாராத, மனதில் 
ஆறாத காயமாய்  
அருகி நின்றுவிட்ட
நினைவுப் பெட்டகம் ! 

காலச் சுவடுகளாய்
நிலைத்து நின்றுவிட்ட
அம்மா என்றவொரு
அற்புத நினைவு ! 
ஆறாத வடுவாக
ஆனாலும் 
மனதில் 
அன்பாக வருடும் 
அற்புத நினைவு !
இனிமைக்கு இனிமை
கூட்டும் 
இதயத்தைத் தாலாட்டும்
இன்னிசை மழையாய்
என்றைக்கும்
உள்நிலைக்கும்
அம்மா என்றவொரு 
அற்புத நினைவு ! 

அம்மா என்றொரு அற்புதம் ! 
அம்மா என்றும் 
அற்புதம் ! 

 --K.Balaji May 08 2016

Sunday, January 10, 2016

இயற்கை போற்றுக !




கருத்து வரும் மேகம் கண்டு 
  கவலை கொள்ளும் தாய் மனம்
கண்ணி மைக்கும் நேரத் திலே
  காலம் மாற்றும் மண் மணம் !

பேரி ருளாய் வந்து நின்று 
  பெரும ழையாய் மாறி டுமோ 
காற்று வந்து கருமே கம்
  கலைந் தே சென்றி டுமோ

அன்ற லர்ந்த மலர்க ளுடன் 
  அது போன்றே சிரித் திருக்கும்
பிஞ்சு மனக் கனவு களின்
  பெருங் கோலம் கலைந்தி டுமோ ?

கணங் கணமாய் வாழ்வி னிலே 
  'கண்டங் கள்' கடப்பதுதான் 
பெண் பேதை கேட்டு வந்த 
  பெரு வரமோ அறியே னே !

வேண்டி வந்த நேரத் தில்
  வேடிக் கை காட்டி நின்று 
வேண் டாத பொழுதி னிலே 
  பொழிவ திலே என்ன சுகம்?

தாக்க வந்த தடையெல் லாம்
  தாங்கிக் கடந்து  வந்தேன் 
பொங்கி வரும் வேளை யிலே
  போக்க ழித்து விடவேண் டாம்!

பொறுத்தி டுவீர் குறையெல் லாம் 
  போற்றி டுவோம் என்றென் றும்
இன்னுமொரு சுழிக் காற்றை 
  யெம்மி தயம் தாங்கா து !

இயற்கை வள மென்றும்
  இனி நாங்கள் காத்தி டுவோம் 
ஈசன் திருவ ருளை 
  என்றும் வேண்டி டுவோம் !  

-K.Balaji
 Jan 09 2016
 9 PM