Face Book LIKE

Friday, July 20, 2018

மவுனங்களின் இசை !

மவுனங்களின்  இசை !
---------------------------------------
வெந்தழலும் வெள்ளமும்
தண்மனதின்  வெண்சிறகை
விரித்துச் சிரித்திடவே
சிரித்து மகிழ்ந்திடவே,
சீரியதோர்  செந்தமிழில்
வரியெழுதும் கவியங்கே
வந்து பிறக்கின்றான் !
வான் தொடவே தான் முழங்கி
வண்ணமுற  இசைக்கின்றான் !

எங்கெங்கும் வண்ணமயம்
எண்ணங்கள் அன்புமயம்
ஏந்தி வரும் சொற்களெல்லாம்
இசை கொண்ட நாத லயம் !
பண்ணும் பதமும் தன்
பாதையிலே ஜதிபோடப்
பேச்சற்ற மௌனங்கள்
பாடுகின்ற ராகலயம் !

  பேச்சற்ற மௌனங்கள்
  பாடுகின்ற ராகலயம் !
  பிரபஞ்சமே இமைமூடி
  ரசிக்கின்ற இன்ப வரம் !


--கி.பாலாஜி
  ஜூன் 2018



No comments: