Face Book LIKE

Friday, October 19, 2018

அகத்தில் நிறைந்த நாதம் !



நாமறி யாமல்
நமக்குள் தோன்றும்
நல்லொரு உணர்வே
நட்பு !
அந்த உணர்வில்
கனிந்த கனியாய்
இருந்தது உமது 
நினைவு!

நினைவில் நிலைத்து 
என்றும் பிரிய 
இயலா ஒருவகை 
உணர்வு 
உம்முடன் எனக்கு 
என்றும் உண்டு 
என்பதை உணர்ந்த 
மனது !

காணும் நேரம் 
வாய்க்கும் போதெல்லாம் 
கனியாய் இனிக்கும் 
பேச்சு !
பதிலுக் கெதுவும் 
எதிர்பா ராத 
பாசம் உமது 
மூச்சு !

அந்த உணர்வு 
காற்றில் என்றும்  
கலந்து எம்முடன் 
உலவும் !
ஆழ்ந்த நினைவாய்
அமுத இசையாய்
அகத்தில் நாதம்
நிறையும் !

மனித நேயம்
என்னும் குணத்தால்
மனதை நிறைத்த
மனிதர் !
உடலை உதிர்த்து
மறைந்த போதும்
உணர்வில் கலந்த
புனிதர் !



-- கி .பாலாஜி
30.09.2018

நட்பாய் நிறைந்த 
திரு.ராஜகோபால் 
அவர்களின் நினைவுக்காய் !

No comments: