Face Book LIKE

Monday, September 3, 2012

மௌன நாதம் !

                                          மௌன நாதம்

சம்போ மஹாதேவ தேவா - சிவ
சம்போ மஹாதேவ தேவேச சம்போ                                          (சம்போ)

அலைபாயும் மனமிந்த நேரம் - சிவ
சம்போ வென்றுன்பா தம் தனை நாடிப் போகும்
அன்பேதா னுருவான தெய்வம் - நீ
அணைப்பா யென்றறிவேனுன் துணைநாடி வந்தேன்          (சம்போ)

எங்கெங்கு சென்றாலும் உள்ளே - சிவ
சம்போசம் போவென் றுன் நாம மொன்றே
ஓமென்ற ஒலியாகிப் பெருகும் - என்னில்
பலநாளாய் விளங்காத பொருளெல்லாம் விளங்கும்            (சம்போ)
                                                                                     
ஐந்தெழுத்து மந்தி ரம்நாதம் - மௌன
குருவாகி உபதேசம் செயவந்த வேதம்
வரவேண்டும் வரவேண்டும் ஞானம் - அது
வந்தால்பின் னெதுவேண்டும் எனவேண்டும்  மௌனம்       (சம்போ)

2 comments:

kothai said...

அருமை.. வளரட்டும்.

Krishnamurthi Balaji said...

மிக்க மகிழ்ச்சி. நன்றி.