Face Book LIKE

Friday, December 27, 2019

சொல்லாலே பந்தல்...

உலுக்கி எடுக்கிறார்கள்!
உறங்குவதாய் நடிக்கிறேன்
ஊம்ஹூம்...
ஒன்றும் புண்ணியமில்லை!
மேலும் உலுக்கப் படுகிறேன் 
உறங்குவதாக நடித்தவன் 
இப்போது 
விழித்தவனாய் நடிக்கிறேன் !
நான் விழித்துக் கொண்டு விட்டேன் !
இவர்களது உலுக்கலோ
இன்னும் தொடர்கிறது !!

விலையறியாப் பதர்களிடம்,
விலைபோகா விஷயங்களை 
விற்றுவிடப் பார்க்கிறார்கள் !
கல்லிலே நார் உரிப்பேன் 
மணலைக் கயிறாய்  
நான் திரிப்பேன் 
என்று 
சொல்லாலே பந்தல் போட்டால்
செயலுக்கு முடிவு ஏது??

கி.பாலாஜி
27.12.2019
மாலை 4.445

No comments: