Face Book LIKE

Monday, December 10, 2018

காணாத கோணத்தில் கவியின் வரவு !

காணாத கோணத்தில் கவியின் வரவு !
-----–----------------------------------------------
வெந்தழலும் தண்ணீரும்
தண்மனதின் வெண்சிறகை
விரித்துச்  சிரித்திடவும் .
சிரித்து மகிழ்ந்திடவும்,
சீரியதோர் செந்தமிழில்
  வரியெழுதும் கவியங்கே
  வந்து பிறக்கின்றான்  !
  வான்தொட்டு முழங்கி
  வார்த்தைக ளிசைக்கின்றான்  !

எங்கெங்கும் வண்ணமயம்
எண்ணங்கள் அன்புமயம்
ஏந்திவரும் சொற்களெல்லாம்
இசைகொண்ட நாதலயம் !

பண்ணும் பதமும் தன்
பாதையிலே ஜதிபோடப்
பேச்சற்ற மௌனங்கள்
பாடுகின்ற ராகலயம் !
   வரியெழுதும் கவியிங்கே
   வந்து பிறக்கின்றான் !
   வான்தொட்டு முழங்கி
   வார்த்தைக ளிசைக்கின்றான்  !

வான்மழையே தேன்துளியாய்
தெய்வீக இசை பொழிக !
வண்டினமே மகரந்தக்
கவிபாடிப் பறந்திடுக !
    வரியெழுதும் கவியிங்கே
    வந்து பிறக்கின்றான் !
    வான்தொட்டு முழங்கி
    வார்த்தைக ளிசைக்கின்றான்  !

--கி.பாலாஜி
03.05.2018
12.15 am

No comments: