Face Book LIKE

Tuesday, March 10, 2020

இதய தாகம்

இதய தாகம்
ராகம்: சிவரஞ்சனி

இதயம் முழுதும் வசந்த மழையில் 
நனைந்த பின்னாலும் தாகம்...
நனைந்த பின்னாலும் தாகம்...    (இதயம்)

அன்பின் வெள்ளம்  
உருண்டு புரண்டென் 
உள்ளில் பொழிந்து வழிந்தே..
சென்ற பின் னாலும்  ஏக்கம்...
சென்ற பின்னாலும் ஏக்கம்..         (இதயம்)

ஒன்றுமில்லாமல் வரண்டதோர் காலம் இருந்ததை நீ யறி வாயோ இதயம் 
வெந்ததை நீ யறிவாயோ ...
திடுமெனத் தோன்றி 
அளவின்றிப் பொழிந்தால் 
போதுமென்றோ  சொல்லத் தோன்றும் - இது போதும் என்றோ சொல்லத் தோன்றும் 
(இதயம்)

பொழிகின்ற வரையில் 
பொழிந்தே தீர்த்திடென்  
மோகங்கள் மாய்ந்தே போகும் அதன் வேகங்கள் அழிந்தே போகும்

வடிகின்ற வெள்ளம் வடிந்தே போகும் 
மீண்டும் வேனல் காலம் !
சக்கரம் என்பது சுழன்றே தீரும் 
முடிவே தொடக்கம் ஆகும் - அது
மறுபடி முடிவினில் தொடங்கும்     (இதயம்)

கி.பாலாஜி
11.11.2019
இரவு 11.30

No comments: