Face Book LIKE

Thursday, September 26, 2019

அன்னை வாணி


அன்னை வாணி


ராகம்: ஆபோகி 

ன்னை வாணி தாரமே நீ    
அறிவுச்செல்வம் ஈந்திடும் தாய் நீ    (அன்னை)

ல்லை என்னும் குறையே இல்லை
இதை ந்தாய் நீ இதுவே எல்லை
இனிவே றேதும் கேட்பதற்கில்லை
ஈந்த வரங்களைப் போற்றுவேன் பிள்ளை   (அன்னை)

ன்னருள் இருந்தால் உலகம் மலரும்
ன்றிய விதைதான் மரமாய் வளரும் 
ன்செயல் என்பது தும் இல்லை
யம் தீர்த்தே ஆறுதல் அளித்தாய். 
     ஒன்பது நாளும் ஒவ்வோர் இரவும்
     தியுன் பெருமை போற்றிப் பணிந்தேன்
     டதமானாய் அன்பெனும் தாயே
     ஆதரவளித்தே காப்பாய் நீயே      (அன்னை)

கி.பாலாஜி
22.09.2019
இரவு 9.30

No comments: