Face Book LIKE

Monday, April 22, 2019

கரையும் நினைவுகள்

உணர்வுகளாய் உள்ளில் கலந்து
நிறைந்த உருவம் !
நினைவுகளாய்
நீர்த்துப் பூத்து நெஞ்சகத்தே
கனன்று வந்த நெருப் பெனவே
காலம் முழுதும்
சுட்டு என்னைச் சாம்பலாக்கும்
சோகம் ஏனோ ?

தென்றலின் சுக மெனவே தேடி வந்து
என் தேவையெல்லாம் தீர்த்து வைத்த
தீஞ்சுடரே !
காற்றில் வந்து எனைக் கலந்த
கீதமே !
நீ புயற் காற்றாய் உருவெடுத்துச்
சுழன்ற தென்னே !

ஈருடலும் ஓருயிரும் என்றதுவும்,
என்னுள்ளே கலந்த உயிர் என்றதுவும்,
இன்னும்
எத்தனையோ வாக்குகளால்
இனிமையீந்து,
உயிர்க் காற்றாய் நிறைந்துவந்த
உருவே நீயும்
இன்று
உலர் காற்றாய் வீசியெங்கோ
மறைந்த தென்னே !

சொல்லொன்றும் செயலொன்றும்
ஆனவுந்தன்
அந்தரத்தின் அழகதனை
இன்று தானே
அறிய நேர்ந்தேன் !

அக்கணம் முதலே நானும்
தெளியலானேன் !
தேர்ந்த ஞானம் வரப்பெற்றுத்
துலங்கலானேன் !
நினைவுகளாய் மாத்திரம் நீ
நிறைய லானாய் !
நெஞ்சின் ஓர் மூலையிலே
மறையலானாய் !

கி. பாலாஜி
11.03.2018

No comments: