Face Book LIKE

Monday, April 22, 2019

என்றும் நிலைக்கும் ராமநாமம்

ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம்

வில்லெடுத்த வீரமோ
சொல் தொடுத்த சாரமோ
கல் பிழைத்த கோலமோ
சொல்வதேது சொல்லிலே

மைநாக செருக் கழித்த
ராமதூதன் வீரமே
ராமன் வீரம்
தனையும் வெல்லும்
ராமநாம தீரமே

திருவரங்கத்தே நிலைக்க
செய்த லீலை எண்ணவோ
திண்மை அழித்து
நன்மை அணையக்
கொண்ட பிறவி என்னவோ

மானுடமே தழைக்க வேண்டி
மனிதனாக வந்து நின்று
பட்ட தொல்லை தம்மை வென்று
பாடம் சொன்ன ராம மே

எதை எடுக்க எதை விடுக்க
என்று குழம்பும் மனதிலே
என்றும் நிலைக்கும் ராமநாமம்
ஒன்று மட்டும் முடிவிலே

-கி.பாலாஜி
11.04.2019
காலை 9 மணி

No comments: