Face Book LIKE

Monday, April 22, 2019

அருளமுதம்

அருளமுதம்

கருணை வெள்ளம் நீ கண் திறக்கையில்
கருகும் பயிர்களும் தழைத்து ஓங்குமே
உலக வெப்பத்தால் உயிர்கள் வாடுதே
உலக நாதனே மழையை அருளுவாய்

அமுத நீரினைப் பொழியச் செய்குவாய்
அருளும் தெய்வமே அணைத்துக் காத்திடாய்
அன்பு ஒன்றினால் உலகை இணைத்திட
அருளும் குருவேயுன் பெருமை போற்றினோம்

வேண்டும் அளவு நீர் நிலைகள் நிறைந்திட
வேகமாகநீ ரமுதம் பொழிந்திட
அமுத கானமா யுன் னருளும் பரவிட
ஆதிசங்கரன் சீடன் அருளுவாய். 
(கருணை வெள்ளம் நீ கண்திறந்திடாய்)

--கி.பாலாஜி
22.04.2019
பகல் 12 மணி

No comments: