Face Book LIKE

Monday, April 22, 2019

காத்திருப்பதில்லை என்றும் காலம்

                          வந்தனம்
காத்திருப்ப தில்லை என்றும் காலம் எந்தக்
காரணமும் தடையில்லை போலும் !
நடப்பவைகள் நேரத்தில் நடக்கும்
எந்த் தடைகளையும் தாண்டி அது நடக்கும் !
ஆண்டிரண்டு போயினவே அம்மா நீ
அருவமாக நின்ற காலம் தொட்டு - நான்
அறிந்த காலம் தொட்டு எந்தன் எண்ணம்
தன்னில் நிறைந்து நின்று ஆட்சி செய்த தாயே !
மக்களது நலங்களெல்லாம் மாதா
மனதுவைத்துக் காத்திடுவாள் தோதாய் !
மனம் சோர்ந்து விழுந்திருந்தேன் நோயால்
கணம்கணமும் கூட நின்று காத்தாய் !
தாய்மை எனும் உணர்வு என்பதென்ன
என்றுதன் தளராத அன்பதனால் உணர்த்தி
வாய்மைதனை நெஞ்சகத்தில் புகட்டி
வளமான வாழ்வு தனை ஈந்தாய் !
வந்தனங்கள் மட்டும்நான் ஈவேன் எனை
வளர்த்த தாயர் அனைவருக்கும் மனதால்
பெற்ற தாயும் பேறளித்த தந்தையுமே
நும்மனைவருடன் கூட நின்று காப்பர் !!
கி. பாலாஜி
08.04.2019
சாரதா சித்தியின் நினைவு நாள்
தாயாயிருந்த அன்னாரின் நினைவுக்காக !

No comments: