Face Book LIKE

Monday, April 22, 2019

பூவோடு பொட்டும் கண்டேன்

ராகம்: சாருகேசி
பூவோடு பொட்டும் கண்டேன்
                      ---------
பூவோடு பொட்டும் கண்டேன்
புன்னகைக் கீற்று கண்டேன்
புள்ளி மான் ஒன்று நடை பயிலக் கண்டேன் கண்டே... களிப்பினில் மனம் மகிழ நின்றேன் (பூவோடு)

முல்லை மலர் மொட்டொன்று
முகைய விழ்ந்து கதை சொல்ல
முன் சொன்ன புதிர்களுக்கும்
முறையான விடை விளங்க
விளக்கத்தின் விலை கேட்டு
நின்றேன் - மனம்
நிலை மாறி நடம் புரியக் கண்டேன். (பூவோடு)

உல்லாசத் தேரொன்று
உள்ளத்தில் அசைந்தாட
உருவாகும் ஒரு நூறு
கவிதைக்கும் இசை சேர
இசை இன்பவெள்ளத்தி னிடையில்
இனிதாக மனமலரும் விடரும் ...
இனி தானே இன்பங்கள் தொடரும். (பூவோடு)

கி.பாலாஜி
07.03.1979

No comments: