Face Book LIKE

Monday, April 22, 2019

தோகை வளர் விழியே. .... தேஷ் ராகம்

தோகை வளர் விழியே
தூய தமிழ் மொழியே! 
தூங்கா நகர் வாழும்
தும்பைப் பூ வழகே !                          (தோகை)

மலயத்வஜன் மனையில்
மலர்ந்த மங்களமே
மாதேவன் திருமுன்பில்
மலர்ந்த மாதுளமே                             (தோகை)
 
 
      சிகரம் வாழ்பெருமான்
      தனைச் சேர்ந்த சீதளமே
      சிந்தை மகிழ்விக்கும்
      சிங்காரத் திருத்தலமே                 (தோகை)

மாதவனின் தங்காய்
மதுராபுரி நங்காய்
மனதால் நினைப்போர்க்கு
மங்களங்கள் அருள்கின்றாய் !         (தோகை)
    
 
      சோகங்கள் இனியில்லை
      சுந்தரன் ஸதியெல்லை
      துதித்தேன் உனையென்றும்
      உன் திருவருள் துணையுண்டு    (தோகை)

கி.பாலாஜி
28.04.2018
12 am

No comments: