Face Book LIKE

Monday, April 22, 2019

இன்னும் ஒரு நாள்...

இன்னும் ஒரு நாள்
கடந்து போனது
இதயம் உள்ளில்
கரைந்து போனது
எத்தனை கனவுகள்
எத்தனை நினைவுகள்
என்னை இதுவரை
கடந்து போயின
கண்டவை இனியவை
காணாது போயவை 
இன்னும் இனியவை
இதயம் நிறைத்தவை
சொல்ல மறந்த
சொற்கள் ஆயிரம்
சொல்லாமலே மறைத்த
சோகம் பல்லாயிரம்
எண்ணம் இறைத்த
வண்ணமோ ராயிரம்
எண்ணா திருத்த
வண்ணமீ ராயிரம்
சொல்லிய வண்ணம்
செய்ததோ ராயிரம்
சொல்லவே யொண்ணாச்
செயல்களோ ராயிரம்

பண்ணி வைத்த
பாயிரம் ஆயிரம்
பண்ணா திறைந்த
எண்ணமோ ராயிரம் !
பண்ணாய் என்னுள்
கலந்தவ ராயிரம் 
கலந்தவர் சிலரே
நிலைத்த தோர்திறம் !

இன்னும் நாட்கள்
கடந்து போகலாம்
இதயம் பலரில்
கரைந்தும் போகலாம்
எத்தனை பேரின்
இதயம் கலந்தேன்
என்பது ஒன்றே
என்னில் நானாய்
வாழ்ந்தி ருந்ததின்
பலனைத் தந்திடும்
எடுத்துக்காட்டாய்
என்றும் நிலைத்திடும் !

--கி. பாலாஜி
01.01.2019

No comments: