Face Book LIKE

Monday, April 22, 2019

மெல்ல மெல்ல மனம் புகுந்தாய்

ராகம் : தேஷ்

மெல்ல மெல்ல மனம் புகுந்தாய்
நொந்த மனம் நீ சுமந்தாய்
வந்தவழி வசந்தங்களை
சொந்தம் எனக் கொண்டு தந்தாய்     (மெல்ல)

பந்தம் என்றும் பாசம் என்றும்
பலர் புகலக் கேட்டு விட்டேன்
பார்த்தறியாப் பாசங்களை
பாவை நீ புகட்ட வந்தாய்.                          (மெல்ல)

பகலெல்லாம் பாரங்களை
சுமந்தே சலித்த மனம்
பால் நிலவு நேசமுகம்
பார்த்தவுடன் பரவசமாம் 

      தெய்வங்களைக் கேட்டதில்லை
      தேவை ஒரு வரம் என்று
      கேளா வரமதனை
       தானாகத் தந்து விட்டான்.                    (மெல்ல)

கி.பாலாஜி
16.06.1984

(மனைவிக்காக எழுதப்பட்டது)

No comments: