Face Book LIKE

Monday, April 22, 2019

நேரமிது நேரமிது...

நேரமிது நேரமிது
நித்திலமே நீ உறங்கு
நிம்மதியை வரமாகப்
பெற்றவனே நீ உறங்கு

நெஞ்சினிலே வஞ்சமில்லை
நிம்மதியாய் நீ உறங்கு
அஞ்சுவதற்கொன்றுமில்லை
அன்புருவே நீ உறங்கு

பாமகனே நீ உறங்கு
பூ முகமே நீ உறங்கு
பார்வையிலே மனங்களை நீ
ஆளுகின்றாய் கண்ணுறங்கு

பால் மணக்கும் தேன் மொழியே
புன்னகையே நீ உறங்கு !
பூவினமே நீ உறங்கு
பொன்னாரமே உறங்கு !

--கி பாலாஜி
மார்ச் 26 2019
12 15 am

(ராம்குமார் சரசுராமுக்காக எழுதப்பட்டது)

No comments: