Face Book LIKE

Monday, April 22, 2019

அம்பலவாணனே

அம்பல வாணனே அருள்தரும் நாதனே
அன்புடன் காருமையே
ஆதரவுன் னினை வொன்றேதானே
அது நிலைத் திடட்டுமையே                          (அம்பல வாணனே)

அழலின் உருவமே அருளின் உருவமா
யமைந்திடு பரம்பொருளே
ஆலம் உண்டுயிர் காத்திட முன்னின்ற
அறக்கரு ணாநிதியே                                     (அம்பல வாணனே)

    பன்னிரு திருமுறை போற்றும் பதியே
    பங்கயக் கண்ணாள் பதியே
    பாமரன் எனக்குன் தாமரைக்கண் திறந்
    தருள்செய் திடுநிதி யே !

    பதஞ்சலி பதத்திற் கிடப்பதம் தூக்கித்
    திருநடனம் புரிந்தனை யே
    பாவாலுனைத் துதித் தேத்திட வருள்செய்
    பார்வதி நாயகனே !                                       (அம்பல வாணனே)

கி.பாலாஜி
08.04.2019
பகல் 11.30

No comments: