நடக்கும் திசையை மாற்றினால்
நிழலின் இருப்பும் மாறும்
எண்ணம் சற்றே மாறினால்
ஏற்புடைத் தாகும் அனைத்தும்!
உண்ணும் உணவின் சுவையை
மட்டும் உணரும் நாவு
உணவின் பின்னுள உழைப்பை
உணர்ந்தால் மறையும் நோவு !
கண்கள் பார்க்கும் கோணம் ஒன்றால்
காரியம் காட்டும் மாயம்
காரியச் சிறப்பு கூடும், அதனில்
கலந்தால் மனித நேயம் !
எண்ணம் ஏற்றம் கொண்டா லன்றோ
செயலும் ஏற்றம் கொள்ளும்
செயலில் மாற்றம் வேண்டும் என்றால்
எண்ணம் மாறிட வேண்டும் !
-- கி . பாலாஜி
13.04.2020
இரவு 7 மணி
No comments:
Post a Comment