Face Book LIKE

Monday, April 13, 2020

பார்வை

நடக்கும் திசையை மாற்றினால்
நிழலின் இருப்பும் மாறும்
எண்ணம் சற்றே மாறினால்
ஏற்புடைத் தாகும் அனைத்தும்!

உண்ணும் உணவின் சுவையை
மட்டும் உணரும் நாவு
உணவின் பின்னுள உழைப்பை 
உணர்ந்தால் மறையும் நோவு !

கண்கள் பார்க்கும் கோணம் ஒன்றால் 
காரியம் காட்டும் மாயம்
காரியச் சிறப்பு கூடும், அதனில்
கலந்தால் மனித நேயம் !

எண்ணம் ஏற்றம் கொண்டா லன்றோ
செயலும் ஏற்றம் கொள்ளும்
செயலில் மாற்றம் வேண்டும் என்றால்
எண்ணம் மாறிட வேண்டும் !

-- கி . பாலாஜி
13.04.2020
இரவு 7 மணி

No comments: