Face Book LIKE

Friday, April 3, 2020

உன்னை...உனக்காக.....


உன்னை...உனக்காக...


கண்வழி புகுந்து 
உள் வரை செல்லும் 
உன்னத உணர்வே 
காதல் !

காலம் என்னும் 
கட்டுப் பாட்டின் 
தடைகளை வென்றது 
காதல் !

உருவம் என்னும் 
தோற்றத் தழகில் 
உயிர்ப்பது மில்லை 
காதல் !

உணர்வால் பிறந்து 
உணர்வில் கலந்து 
உள்ளில் மடிவது 
காதல் !

ஊரும் பெயரும் 
நாடும் வீடும் 
வேண்டுவ தில்லை 
காதல் !

உயரிய பண்பின்
வயப்பட் டென்றும் 
உதிப்பது மில்லை 
காதல் !

பெயர்களில் அடங்காப் 
பேதைப் பொருளாய் 
உணர்வில் உதிப்பது 
காதல் !

உன்னை நீயாய் 
உணர்ந்து லயித்து 
உன்னில் கலப்பது 
காதல் !

உந்தன் பெயரோ 
புகழோ பணமோ 
வேண்டுவ தில்லை 
காதல் !

உன்னை என்றும் 
உனக்கென மட்டும் 
உணரும் உயிரே 
காதல் !

--கி.பாலாஜி
02.04.2020
காலை 6.15

No comments: