Face Book LIKE

Saturday, April 25, 2020

கற்பகத் தருவின் கருணை நிழல்




கற்பகத் தருவின்கருணை நிழலில் 
காலம் எல்லாம் தவம் இருப்பேன் 
கருணைக் கடல்தன் இமைசற்று திறந்தால் 
கவலைகள் ஏதும் இல்லை
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

கவலைகள் அண்டிடும் காலத்தில் மாத்திரம் 
காலடி நாதனை நினைத்திடும் மனமே 
கண்களை மூடி என்றும் திருவடி 
சரணென்று கிடந்திட முயல்வாயே 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

அத்வைத நாதனின் அருள் கிடைத் திடுமோ 
ஆழ்மனம் தேடிடும் பொருள் கிடைத்திடுமோ 
அருநவ நிதியைத் தேடிடும் மனமே 
அனுதினம் அவன் துதி பாடிடுவாயே 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

கி.பாலாஜி
16.02.2020
காலை 11 மணி

No comments: