Face Book LIKE

Saturday, April 4, 2020

ராமாயண நாயகர்

ராமாயண நாயகர்



ராமாயண நாயகர்
இருவர் பிறப்பு
ஒன்றி வருமோர்
இரண்டுநட்சத் திரங்களில்.
புனர்பூசம் பூசம்
ராமர் பரதன் ;
இலக்குவ னுடனே
இன்னொரு தம்பி
அருநட் சத்திரமாம்
ஆயில்யத்தில்;
திதியோ
ராமனுக்கு நவமி
மற்றவர்க்கு தசமி!

தந்தை தந்த சொல்காத்த ராமன்!
தாய்சொன்ன சொற்படி இலக்குவன்!
தமையனின் அறவுரைப் படியாங்கு பரதன்
அண்ணலார் திருவடி நடத்திய அரசு!
நாடாள் பரதன் தாள்பணிந் தாங்கே
தம்பிசத் ருக்னன் நடந்திட்ட பாங்கு !

அறமே உருவாய் அன்பாம் ராமன்!
அவனின் நிழலாய் இலக்குவ சேவை!
அறத்தின் ஒளியாய் பரதனின் நீதி!
அவனின் நிழலாய் சத்ருக்னன் பாதை!

பொறுமையில் சிறந்த சீரிய பரதனாய்
சேவையில் சிறந்த இலக்குவ மனமாய்
கருத்தாய் கவனமாய் சத்ருக்னனாய்
அனைவரும் போற்றும் அறமே ராமனாய்

வாழ்ந்திட உறுதி கொள்வாய் மனமே
வளமும் நலமும் சேரும் தினமே
அன்னை சீதை அருள்பா லிப்பாள்
அனுமன் துணையும் என்றும் நிலவும் !

கி.பாலாஜி
04.04.2020




No comments: