Face Book LIKE

Sunday, April 5, 2020

எங்கும் ஒளிமயம்





ஏற்றுக விளக்கு
எங்கும் ஒளி மயம் 
போற்றுக பாரதம் 
தோன்றுக பேரொளி 
மாற்றல ரெல்லாம் 
சென்று ஒளியுக
ஆற்றிடும் சேவைக் 
கரங்கள் மிளிருக 

நன்மையைக் கருதி 
நானில முழுதும் 
நலமே சூழ்கென 
ஏற்றும் விளக்கு 
புன்மை அனைத்தும் 
போவெனப் போக 
புண்ணிய ரெல்லாம் 
ஏற்றும் விளக்கு!

உலகம் முழுதும் 
ஒன்றே ஜோதி 
உள்ளம் அதனில் 
விளங்கும் ஜோதி 
ஊரும் நாடும் 
நோய்நொடி இன்றி 
உயர்ந்த மனதுடன் 
ஏற்றும் ஜோதி !

நலமே சூழ்கென 
நினையா மனத்தின் 
நிலையாத் தன்மைய 
தீமைக ளெல்லாம் 
ஒற்றை விளக்கின் 
ஒருதிரிச் சுடரில்
விட்டில் போலே 
வீழ்ந்து மாய்க !

உள்ளத் தொளியில் 
உவந்து சொல்லும் 
ஒவ்வொரு சொல்லிலும் 
உண்மை  ஒளிருக
உலகம் எங்கிலும் 
வெண்மை பரவுக 
வேற்றுமை மறையுக
 ஒற்றுமை மலர்க !

      ஏற்றுக விளக்கு 
      எங்கும் ஒளி மயம் 
      போற்றுக பாரதம் 
      தோன்றுக பேரொளி !

-- கி.பாலாஜி
05.045.2020
இரவு 7 மணி

No comments: