Face Book LIKE

Wednesday, July 1, 2020

நெஞ்சில் நெருடும் முள்




நெஞ்சில் நெருடும் முள்

மாலையிடவும் முடியவில்லை 
மறந்திடவும் முடியவில்லை 
மனதில் சுமக்கின்ற 
பாரத்தை இறக்கி வைக்கச் 
சுமைதாங்கிக் கல்லேதும்
சுற்றுப்புறத்தில்லை !

கண்களால் பல கதைகள் 
நானும் சொன்னதுண்டு;
வெறும் கதை எனக்கேட்டு 
நீ வேறிடம் சென்றதுண்டு!

உள்ளில் அலையடிக்கும் 
ஓங்காரப் பேரிரைச்சல் 
உன் செவிக்குக் கேட்கப்
போவதில்லை பூமகளே!

எத்தனைதான் மனதுக்குக் 
காரணங்கள் புரிந்தாலும் 
காதல் பிறப்பதற்குக் 
காரணமே இல்லையடி !

---கி.பாலாஜி
25.06.2020

No comments: