Face Book LIKE

Thursday, July 23, 2020

திருவருள்தான் பிறந்ததுவோ ராமா


திருவருள்தான் பிறந்ததுவே ராமா 
திருவாய்தான் மொழிந்ததுவே ராமா 
திருவீய்ந்து நின்றதுவே ராமா
தீபத்தின் சுடரெனவே ராமா

பார்புகழும் நின்நாமம் ராமா
பன்முறைநீ சொலவைத்தாய் ராமா
பல்லாண்டு பாடுகிறேன் ராமா
வில்லாண்ட தோள்வலியோய் ராமா

வில்லெடுத்த வீரமதை ராமா
சொல்லெடுத்துப் பாடவைத்த ராமா
கல்லுக்கு உயிர் தந்த ராமா
காசினியைக் காக்கின்ற ராமா

மனமார்ந்த பக்திக்கே ராமா
கதிமோட்சம் தனையீந்த ராமா
மானவனா யவதரித்த ராமா
மனமதிலே ஒளிவீசும் ராமா

நிதிதானோ சுகமீயும் ராமா நின்
ஸந்நிதியே சுகமீயும் ராமா
நினைவொன்றே நிதியன்றோ ராமா
நின் ளருளொன்றே கதியன்றோ ராமா

கி.பாலாஜி
08.05.2020
பகல் 2.30

No comments: