Face Book LIKE

Wednesday, July 22, 2020

விலகிப் போ 'கொரோனா'

விலகிப் போ கொரோனா !

அன்றாடங் காச்சிகளுக்கு
ஏதப்பா ஊரடங்கு ?
  அன்றாடங் காச்சிகளுக்கு
  ஏதப்பா ஊரடங்கு ?

'விரும்பிப் போனால் 
விலகிப் போகும்'
என்பார் சொல்லிக் 
கேட்டதுண்டு!
நாம் விலகி விலகி 
நிற்கிறோம்; அதுவோ
விரும்பி விரும்பியே 
வருகிறதே ;
கழுவிக் கழுவி 
விடுகிறோம் ;
கையில் ஒட்டித் 
தொலைக்கிறதே!
தொடாமலே 
சிணுங்குகிறோம்,
படாமலே நகர்கிறோம் ;
ஆனால் அதுவோ 
தொடாமல் கூடப்
படருகிறதே !

விலகி இருந்தே 
பழகுவதும்,
வீட்டுக்குள்ளே
முடங்குவதும்.....
  விலகி இருந்தே 
  பழகுவதும்,
  வீட்டுக்குள்ளே
  முடங்குவதும்.....
இன்னும் எத்தனை 
காலம் நடக்கும் 
இந்தக் 
கண்ணாமூச்சி ஆட்டம்? 

அன்றாடங் காச்சிகளுக்கு
ஏதப்பா ஊரடங்கு ?
'கஞ்சி வருதப்பா' என்று 
பாடி விட்டால் 
வந்து விழுமா கஞ்சி?
இவர்களுக் காக வேனும் 
'கண்ணத் தொறக்கணும் சாமி 
இது வானம் பாக்குற பூமி'...

--கி.பாலாஜி
11.07.2020
இரவு 10 மணி

No comments: