Face Book LIKE

Wednesday, July 22, 2020

அரவண துயிலும் அரங்கநாதா

Translation of Slokam SHANTAKARAM BHUJAGASAYANAM
in Tamil by KB and sung by LB

அமைதியின் உருவாய் அரவினில் துயில்வோய்  
ஆலிலை வயிற்றில் அரவிந்தம் உடையோய் 
அமரர்கள் அனைவரும் தொழுமோர் அரசே 
அனைத்துலகிற்கும் ஆதாரம் நீ !

ஆகா யத்தையும் கடந்த நற்பொருளே 
அழகிய கொண்டல்  நிறமுடை யோனே 
நலமே நிறைந்த திருவடி வானோய் 
திருமகள் திருமனம் ஆளும் வடிவோய்

தாமரைக் கண்ணா தவமுனிவோரின் 
சிந்தையில் அமர்ந்த சீரிய திருவே 
பாற்கடல் அமரும் பரமா வணக்கம் 
அச்சங்க ளகற்றும் அச்சுத சரணம்

அகிலத்தை ஆளும் அரசே சரணம் 
அண்டங்க ளெங்கும் நிறைவோய் சரணம் 
திருமகள் மனம் உறை தேவே சரணம் 
திருவேங் கடவா சரணம் சரணம்

திருமலை உறையும் திருவே சரணம் 
திருமால் திருவடி சரணம் சரணம் 
திருமறை போற்றும் திருத்தாள் சரணம் 
திருவடி தொழும்பே றளிப்பாய் சரணம்

--- கி. பாலாஜி
     27.05.2020
     காலை 8.45

'அச்சங்களகற்றும்' என்பது வரை வடமொழியில் உள்ள 
'சாந்தாகாரம்' என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு.

No comments: