Face Book LIKE

Sunday, November 24, 2019

நினைவுகளே


நினைவுகளே !
பொன் மாலை அணிந்து வாருங்கள்
பூச் சரங்கள் ஆடிட வாருங்கள்
வண்ணப்பூச்சில் எண்ணச் சிறகை
வருடித் தந்திட வாருங்கள்.            (நினைவுகளே)

இமைகள் மூடிட எண்ணத் தோணி
எழுந்து நிமிர்ந்து பாய்ந்திடுதே
கண்ணீர் அருவி ஆனந் தத்தில்
கடலாய் பெருகி ஓடிடுதே
களித் தோடிடுதே.              (நினைவுகளே)

பள்ளிக் காலப் பாடங்கள் இன்று
பாகாய் இனித்து உருகிடுதே
வெள்ளிச் சதங்கை போலொரு நாதம்
வேனல் மழையாய் பொழிகிறதே...
விளையாட்டாய் மனம் களிக்கிறதே
(நினைவுகளே)
கி.பாலாஜி
14.07.2019
இரவு 08.30

No comments: