Face Book LIKE

Sunday, November 24, 2019

கண்ணயர்ந்துறங்கையில்...


"அன்வேஷிச்சு கண்டெத்தியில்லா"என்ற மலையாளத் திரைப்படத்தில் வரும் "  இன்னெலெ மயங்ஙும் போள்" என்ற பாடலின் மொழிபெயர்ப்பு; அதே மெட்டில் பாடக்கூடியது.

பாடல்:
கண்ணயர்ந் துறங்கையில்
கனவொன்றின் காலடிப்
பொற் சிலம்பொலிநான்
கேட்டெழுந்தேன்                        .             (கண்)

மார்கழி மாதத்தில்
முதன்முதல் மலர்கின்ற
மாதுளைப் பூவின்
மணம் போலே
நினைக்காத நேரத்தில்
நெகிழ்ந்தொரு  தருணத்தில்
நித்திலமே நீ என்
அருகில் வந்தாய்    .                                 (கண்)

பௌர்ணமி நிலவொளிப்
பாற்கடல் நீந்தி வரும்
விண்ணதன் வெண்மேகக்
கொடிபோலே
பொன்னொளிர்க்
கனவொன்றின்
ஏதோ நினைவிழைத்
தும்புரு மீட்டி
நீ வந்தாய்.                                                   (கண்)             

வானத்தில் இருளில்
வழி மாறி வந்து நின்ற
வசந்தத்து நிலவதனின்
கதிர் போலே
முகத்திரை தானணிந்த 
மௌனத்தின் லயம்போலே
முன்வந் தழைக்காமல்
நீ வந்தாய்                                                    (கண்)


---கி.பாலாஜி
29.07.2019

No comments: