Face Book LIKE

Sunday, November 24, 2019

பூமிக்கு வந்த பூரண சந்திரன்


பூமிக்கு வந்த ஓர் பூரண சந்திரன்
புன்னகை புரிகின்ற தோ
பூக்களில் ஆடும் பொன்மழைத் துளியாய் பேரெழில் படைக்கின்ற தோ

கார்முகில் ஓடும் கண்களின் ஓரம்
கவிதைகள் பிறக்கின்ற தோ
தேரொன் றெழுந்து தோரணம் அசையத் தெருவினில் வருகின்ற தோ

மயக்கும் குயிலின் குரலைத் தனது மழலையில் தருகின்ற தோ
மாலை நேரத்துச் சூரியக் கதிராய்
மங்கலம் அளிக்கின்ற தோ

மாமயில் நாடும் மேகத் தெழில்நெடும்
குழலில் மிளிர்கின்ற தோ
மாதின் குணநலம் யாவும்தெய்வ
வடிவில் வளர்கின்ற தோ


கி.பாலாஜி
15.09.1981

No comments: