Face Book LIKE

Sunday, November 24, 2019

காதல் என்பதற்கழிவில்லை!


காதல் என்பதற் கழிவில்லை அது
வாழா மன மில்லை
கனவும் நினைவும் காதலின் துணையால்
காணும் ஓர் எல்லை                      (காதல்)

இதோ இதோ என்றே சொல்லி
இழுத்துச் சென்றதே -காதல்  (2)
இன்பம் என்றால் என்னவென்று
சொல்லித் தந்ததே
    கனவுக ளெல்லாம் கானல் நீராய்
    மறைந்தே போனதே
    நனவுக ளென்னும் நெடுமூச் சொன்றில்
    கரைந்தே போனதே                   (காதல்)

என்னில் உன்னைக் கரைத்து வைத்தது
காதல் ஒன்றுதான்
என்மனம் தன்னில் நிலையாய் நிற்பதும்
உந்தன் நினைவுதான்
    உறவுகள் என்றும் மறைவ தில்லை
    அந்த உருவம் மறைந்தா லும்
    உணர்வுக ளென்றும் அழிவதில்லை
    அந்த உறவே அழிந்தாலும்        (காதல்)


--கி.பாலாஜி
16.07.2019
பகல் 12 மணி

No comments: