Face Book LIKE

Showing posts with label Song On Ganapathi-Varam Tharuvai. Show all posts
Showing posts with label Song On Ganapathi-Varam Tharuvai. Show all posts

Friday, October 30, 2009

குருவாயூர் ஏகாதசி (GURUVAYOOR EKADHASI)





"GURUVAYOOR EKAADHASHI" (குருவாயூர் ஏகாதசி...)

May be, so many of us would have heard the wonderful devotional song "Guruvayoor Ekadhashi thozhuvaan pOgunnu" in Malayalam sung by Jesudas for the Album named "Vanamaala".

A Tamil Translation of the song , followed by the original song in Malayalam Lyrics and Video, are given below..

            
குருவாயூ ரேகாதசி தொழவே நடக்கின்றேன்
வழிகாட்டும் வழிகாட்டும் நாரயண னுருவம்
தளரும்போ தாத்மாவாம் பசுவேநின் நாவில்
அமுதம்போல் ஊறட்டும் நாராயண நாமம்
ஹரிநாராயண நாமம் (குருவாயூர்)

மாலைகள் உனக்காகப் பீதாம்பரம் நெய்யும்-அதி
காலைகள் உனக்காகப் பாலாகப் பொழியும்
புல்லாங்குழல் நாதம்தான் காடெல்லாம் பகவான்
அணியும்மயில் பீலித் திருமுடியோகார் மேகம்
திருமுடியோகார் மேகம் (குருவாயூர்)

கருடன்தன் சிறகைவிரித் தாற்போலேவானம்-தன்
வில்வண்ணம் நின்மார்பில் மாலைகள் ஆக்கும்
கண்திறந்தால் காணுமிடம் எல்லாமே நீதான்
குருவாயூ ரப்பாநின் விளையாடல் கள்தான்
திரு விளையாடல் கள்தான் (குருவாயூர்)

---k balaji, November 26 1985, 6 a.m.---


 ഗുരുവായൂർ ഏകാദശി തൊഴുവാന് പോകുമ്പോഴ്
വഴികാട്ടുക വഴികാട്ടുക നാരായണ രൂപം
തളരുമ്പോ ഴാത്മാവാം പശുവേനിൻ നാവിൽ
അമ്രുതമ്പോ ലൂറീടുക നാരായണ നാമം               (ഗുരുവായൂര്)

നെയ്യുന്നു പീതാമ്പര മീസൻദ്ധ്യക ളാവാം
പൈയ്യെല്ലാം വാർക്കുന്നു പാൽ മാധുരിയല്ലോ
ഓടക്കുഴ ലൂതുന്നു കാടെല്ലാം ഭഗവാൻ
ചൂടുന്നൊരു പീലിത്തിരു മുടിയോ മഴമേഘം        (ഗുരുവായൂര്)

ഗരുഡൻപോ ലാകാശം ചിറകാർന്നീ ടുമ്പോൾ
വനമാലകൾ തീർക്കുന്നു മഴവില്ലുക ളിപ്പോൾ
നിറകണ്ണാൽ കാണുന്നേ നെങ്ങെങ്ങും ഭഗവാൻ
ഗുരുവായൂ രപ്പാനിൻ ക്രുഷ്ണാട്ടം മാത്രം
                         നിൻ ക്രുഷ്ണാട്ടം മാത്രം                   (ഗുരുവായൂർ)




Saturday, September 15, 2007

வரம் தருவாய் வாரணனே

வரம் தருவாய் வாரணனே!
(ராகம்:ஹம்ஸத்வனி)

வரம் தருவாய் வாரணனே!
வலம்புரி விநாயகனே - எனக்கொரு (வரம்)

உலகம் புரந்திடும் உமையாள் மகனே
உருவான ப்ரணவத்தில் உறைபவனே
திருவான வேதங்கள் தொழுதிடும் தேவனே
திருமால் மருகனே திவ்யஸ்வ ரூபனே (வரம்)

ஆணவம் கன்மம் மாயைகள் அழிப்பாய்
அருட்கடல் தனிலே எமைமூழ் கடிப்பாய்
அன்பெனும் உருவே அருள்தரும் சுடரே
ஆதியும் அந்தமும் இல்லாப் பொருளே

அகம் குழைந்துன் பதம்நினைந் திடும்
கணம் தனில்கண் மலர் மலர்ந்திடும்
அறம் வளர்த்திடும் திறம் கொடுத்திடும்
அழகிய் திருக்கரம் அணைத் தெடுத்திடும் (வரம்)